வலதுசாரிகளின் தலையில் ஓங்கிக் குட்டு வைத்திருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது விவாதத்துக்கு அப்பாற் பட்ட அடிப்படை உரிமை, அதைப் பறிப்பதைக் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.